3.31.2011

ஆக்கமும் தாக்கமும்

அமைதி பூங்காவில்
பூத்துக்குலுங்கும் தமிழகத்து மலர்களாகிய நாம் மீண்டும் மலர்ந்த முகத்துடன் 01-04-2011,இன்று எதிர்பார்த்திருக்கும் "ஆக்கமும் தாக்கமும்" என்ற தலைப்பின் ஊடாக ஏன்? என்பதை முதலில் காண்போம்.

முழு மனித சமூகத்திற்கும், மனிதர்களால் ஆக்கங்களும் அதன் வாயிலாக தாக்கங்களும், நன்மைகளும் மட்டும்தான் கிடைத்திடவேண்டும், கடுகளவும் அழிவோ, அக்கிரமங்களோ இனிமேல் என்றும் நடந்திடக்கூடாது என்பதாகும்.


ஆக்கம்: ஒன்றை உருவாக்குவது அல்லது கண்டுபிடிப்பது ஆக்கமாகும்

தாக்கம்: உருவாக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்டவைகளால் முழு மனித சமூகமும் பெறும் பலன் களும் நன்மைகளும் தாக்கமாகும்.
மின்சாரம்: உதாரணத்திற்கு இதை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கண்டுபிடிப்பு.

1. கோடிக்கணக்கான மக்கள் உலகளவில் பிழைப்பை ஓட்ட பொருளாதாரம் தேடும் வகையில் தொழிற் கல்வியாக அமைந்து எலக்டிரிக்கல் இன்ஜீனியர், எலக்டிரீஷியன் போன்ற சான்றிதழ் பெறுவதுடன் அரசாங்கத்தால் மின்சார வாரியம் என்று வரவும் ஏற்படுத்துகிறது.

2. சூரியன் மறைந்தவுடன் இருளில் மூழ்கிடும் இவ்வுலகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும் இந்த மின்சாரம்தான்

3. உலகம் மொத்தமும் தமது வீடுகளில் பயன்படுத்திவரும் குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, தேய்ப்பு பெட்டி, வாஷிங்க் மெஷின், தையல் மெஷின்,கிரைண்டர், மிக்ஸி, தண்ணீர் மோட்டார், தொலைபேசி மற்றும் கம்யூட்டர் போன்ற அணைத்தும் மின்சாரம் இல்லாமல் இயங்குமா?
4. முழுமனித சமூகமும் உபயோகம் செய்துகொண்டிருக்கும் அனைத்துப்பொருட்களையும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்குவதற்கு தேவையானதும் மின்சாரம்தான்.
5. ஆகாய விமானம், கப்பல், வாகனங்கள் போன்ற அனைத்தும் பூமியின் இந்த மூலையிலிருந்து எதிர் மூலையில் உள்ளவரையும், தொழில் ரீதியாகவும் தொடர்பை ஏற்படுத்துவதும் நடை பெறவேண்டுமானால் மின்சாரத்தால்தான் முடியும்.
6. இன்னும் மருத்துவமணைகளில் எக்ஸ்ரே மெஷின், ஸ்கேன், இரத்தபரிசோதனைகள் செய்யும் இயந்திரங்களும் மின்சாரத்தால்தான் செயல்படுகின்றன. இப்படியாக இன்னும் அடுக்கிக் கொண்டேபோகலாம். இதனைக் கண்டுபிடித்தவர் இப்போது வருவாரேயானால் அவருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
மின்சாரம் இல்லை என்றால் மண்ணுலகம் இல்லை என்கிற அளவு தாக்கத்தையும் பலனையும், நன்மைகளையும் தந்து கொண்டிருக்கிறது.

உருவாக்குதல்: உதாரணத்திற்கு மாம்பழம், வாழை,ஆப்பில்,ஆரஞ்சு,திராட்சை, மாதுளையை எடுத்துக்கொள்வோம்.இவைகளில் ஏதாவது ஒன்றை உண்டு சுவைக்காதயாரும் உண்டா? சிந்தியுங்கள்.இந்த பழங்களைதரும் மரங்களை உருவாக்கியதில் நமக்கு ஏதாவது பங்கு இருக்கிறதா? இல்லவே இல்லை. இருந்தாலும் அனுபவித்து வருகிறோம்.
நமக்கு முன்னோர் நமக்கு இப்படிப்பட்ட நலன் பெறும் காரியங்களை செய்ததுபோல் நாம் நமக்குப்பின் வருபவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமா? வேண்டாமா? அப்படி செய்வது என்றால் அது எப்படி அமையவேண்டும் தெரியுமா? நாளை அறுவடை செய்யும் நிலையில் உள்ள ஒரு நெல்பயிரை பிடுங்கி ஆய்வு செய்து பாருங்கள். அதில் ஏழு கதிகள் இருக்கும். ஒவ்வொரு கதிரிலும் சுமார் 100 நெல் மணி வீதம் மொத்தம் சுமார் 700 நெல் மணிகளை காண்பீர்கள். ஆனால் விதைத்தது ஒறு நெல்மணிதான். இதிலிருந்து கிடைக்கும் படிப்பினைபடி தமிழகத்து மலர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பூமாலையை உருவாக்கப்போகிறோம் அதுதான்
அமைதி பூங்கா அறக்கட்டளை (APT)
இது ஒறு ஆக்கம் இதுபோல் இன்னும் ஆறுவகை ஆக்கங்களின் வாயிலாக 700 மட்டுமல்லாமல் அதற்கும் மேற்பட்ட தாக்கங்களை, பலன் களை, நலன் களை பெற இருக்கிறொம் அப்போது இப்பூங்காவை உலகமே உற்று நோக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

அடுத்து எதற்கு? என்பதை 01-05-2011 அன்று பூத்த மலர்களாக "வாழ்க்கை வாழ்வதற்கா, வழக்காடுவதற்கா" என்ற தலைப்பின் வாயிலாக தொடர்வோம்.

இந்த அறக்கட்டளை மாநில  அளவில் ஒரு குழுவாகவும், மாவட்ட அளவில் ஒரு குழுவாகவும், கிராமங்களுக்கு ஒரு குழுவாகவும் செயல்பட இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றில் செயல்பட விருப்பம் உள்ளவராக இருப்பின் அதில் எந்நிலையில் செயல்பட விரும்புகிறீர்கள் எபதை தெரியப்படுத்தவும்.
தலைவராகவா, செயலாளரா, கணக்காளரா, ஆலோசகரா, செய்திகளை சேகரிப்பவரா, மக்கள் தொடர்பு இப்படி எதில் ஆர்வம் என்பதை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அறிவிப்பு மாணவ, மாணவியருக்குரியதாகும்

நல்லதை நினைப்போம்; நல்லதையே செய்வோம். அறிந்தவர் அனைவர்க்கும் தவறாது அறிவிக்கவும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை பதிவு செய்ய