5.03.2011

வாழ்க்கை வாழவா வழக்காடவா?

வாழ்க்கை வாழவா வழக்காடவா?
என் கின்ற தலைப்பின் வாயிலாக
" அமைதி பூங்கா" அறக்கட்டளை எதற்கு?
என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆவலுடன்
01.05.2011 வரை வாடாமல் காத்திருக்கும்
வண்ணமலர்களே! வாருங்கள், பாருங்கள்.
பார்வையில் பலச்செய்திகளை இடம்பெறச்
செய்திருப்பது, நாம், சிந்தித்து, உணர்ந்து, படிப்பினை
பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை, எண்ணத்தை
நினைவில் நிறுத்தி தொடரவும்:
1. குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து.
சம்பவ இடத்திலேயே 63 பயணிகள் பரிதாபமாக
உயிரிழந்தார்கள்.
2. வறுமைக் காரணம் குடும்பமே தற்கொலை
உணவில் விஷம் கலந்து
3. மாடியிலிருந்து குதித்து மாணவி மரணம் "ஈவ் டீஸிங்க்"
4. தாயைக் கொன்ற மகன் சொத்தை பிரித்து தராததால்
5. விவாகரத்து கோரியவர் மரணம் மர்மமாகவுள்ளது
6. "கொடூரம்" பாகப்பிரிவினையின் போது அண்ணன் , தம்பி
ஒருவருக்கொருவர் வெட்டிக் கொன்றனர் (கொலை)
7. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நூதனமுறையில்ச்சாவு
முன்விரோதம் எனக் கருதப்படுகிறது
8. கன்னிப்பெண் கற்பழித்துக்கொலை அடையாளம் தெரியவில்லை
9. தொழில் அதிபர் தங்கும் விடுதியில் தூக்கில் தொங்கினார்
10. திடீரென வீட்டில் புகுந்து கொலை செய்துவிட்டு ஓட்டம்
11. "திடீர்" குண்டுவெடிப்பு 40 சடலங்கள் கண்டுபிடிப்பு 130 பேர்
கவலைக்கிடம்
12. பட்டப்பகலில் துனிகரம் வங்கியில் புகுந்து கொள்ளை
13. சுங்க அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை
சிக்கியது ரொக்கமாக 10 கோடி ரூபாய்
14. பரபரப்பு சென்னையில் போலி டாக்டர்கள் கைதால்
15. அரசு மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது; மருத்துவர் வர தாமதம், மக்கள் ஆவேஷம்
16. வ்யிற்றுபசி தீர்க்க உடல்பசி தீர்த்த உத்தமி கைது
17. "தலையில் இடி" படித்தவர் முதல் பாமரர் வரைக்கும் ஏமார்றினர்
தவணைமுறை விற்பனையாளரின் தந்திரச்செயல்
18. மருத்துவரை விரட்டி, விரட்டி அடித்துக் கொன்றனர் கிராமமே
ஒன்று சேர்ந்து சிறு நீரகம் (கிட்னி) மோசடி
19. கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போனது இரண்டு சக்கர
மோட்டார் வாகனம்
20. கத்திமுனையில் வழிப்பறி; தாலியும் போனது, பட்டதாரி கைது
21. சாலை மறியல் குடி நீர் கேட்டு பெண்கள்
22. குப்பைத் தொட்டியில் கொழு, கொழு ஆண் குழந்தை
23. லஞ்சம் வாங்க மறுத்த உயர் போலீஸ்
அதிகாரியை சுட்டுத் தள்ளினர்.
24. போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தவர் கைது
25. வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக பல இலட்சம் பணமோசடி
இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வு,
வேலை இல்லா திண்டாட்டம், லஞ்சம், ஊழல், பிச்சைக்காரர்கள்,
மதுக்கடைகள், விபச்சார விடுதி, போதை பொருட்கள், கடத்தல்
போன்றவைகள் வளர்ந்து கொண்டே வருதல்,
இப்படியாக, இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம்
இச்சூழலில் தமிழகத்தை அமைதி பூங்கா என்றழைப்பதா? அமளிபூங்கா
என்றழைப்பதா?
மக்கள் மன நிலை மாறவேண்டும்; அல்லது
மாற்ற வேண்டும், அதற்குத்தான் "அமைதி பூங்கா" அறக்கட்டளை.
முடியுமா? கேள்விகள் எழலாம்? முடியும்
மாணவ, மாணவியர் ஒன்றிணைந்தால் நிச்சயம்
எப்படி என்பதை அறிய ஆவலாக இருக்கிறதா?
இருந்தால், இந்த தமிழகத்தில் சுமார் 10 கோடி
மக்கள் வாழ்கிறோம்; குடும்பத்திற்கு 5 பேர் என்று
வைத்துக்கொண்டாலும் 2 கோடி குடும்பங்கள்; குடும்பத்திற்கு
1 வர் வீதம் பார்த்தாலும் 2 கோடி மாணவ, மாணவியர் மா நில
அளவில் படித்து வருகிறோம்;
இதில் நாலில் ஒரு பங்காக கணக்கிட்டாலும் 50 இலட்சம்
மாணவ, மாணவியரின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தெரியப்படுத்தப்படும்
(அறிவித்துத் தரப்படும்)
அது நாள் வரை பல தலைப்புகளில் தெளிவு
பெற்று மன மாற்றத்தை மலரச்செய்வோம்.
அடுத்து, மேற்க்கண்ட சம்பவங்கள் அனைத்தும்
நடைபெறக் காரணமாவது:
1. பகுத்தறிவை பயன்படுத்தாதது
2. மனசாட்சி இல்லாதது
3. சுய நலம், தனக்குத்தானே தீங்கிழைத்தல்
4. ஏமாறுவது, ஏமாற்றுவது
5. சொல் ஒன்று, செயல் ஒன்றாயிருப்பது
6. உழைக்காமல் உண்ணுதல்
7. பொறாமை, கஞ்சத்தனம்,பேராசை
8. சிந்திக்காமல் செயல்படுதல்
9. சமூகச்சீரழிவு, சமூக ஊனம், சமூக மூட நம்பிக்கைகள்
10.தான் ஒரு மனிதன், ஒரு நாள் மரணிப்பவன் என்பதை மறந்து வாழ்தல்
இவைகளுக்கான விளக்கம் காண்பதற்கு முற்படும்
முன்பாக வேறு சில விஷயங்களை அறிவது அவசியமாகும்
அந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபெறத்தான்
நீதி மன்றங்களை அனுகி வழக்குகள் தொடர்கிறோம்; ஏன்?
தானாக தெரியவருகிறது வாழ்க்கை வாழத்தான் என்று,
அவ்வாழ்வு நிம்மதியாக அமைய வேண்டுமென்றால்
நிம்மதியில் முதல் இரண்டு எழுத்துக்களை நீக்கினால் "மதி" (அறிவு,புத்தி)
நடுவிலுள்ள இரண்டு எழுத்துக்களை அகற்றினால் 'நிதி' (பணம்)
இந்த இரண்டையும் (மதி+நிதி) பயன்படுத்தும் விதமாக பயன்
படுத்தினால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்
இல்லையென்றால் "அதோகதி" தான் எதிர்காலம்
வாழ்வின் அடிப்படை தேவை என்ன? பணம், இல்லையா!
இதை பெறும் வழிகள் 1. உடல் உழைப்பு 2. அறிவுத்திறன் 3. முதலீடு செய்தல்.
இப்படி தேடும்போது நம் தேவையை பூர்த்தி செய்யுமளவு பெற்றால் வாழ்க்கை சரியாக ஓடும், இல்லையென்றால் சரிந்துதான்
ஓடும்.
சரி செய்யும் அளவு பெற நம்மிடம் தரமான கல்வி
வேண்டும் எதிர்கால நோக்குடன்; இக்கல்வி பெற கட்டு, கட்டா
பணம் கொடுக்கும் இழி நிலைதான் உள்ளது; இதற்கிடையில்
லஞ்சம் ஊழல் தலையீடு பெரும் பிரச்சினை இல்லீங்களா
இத்தடைகளை தாண்ட சொத்துக்களை விற்று, அடமானம்
வைத்து, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, வங்கியில் உதவிப்பெற்று
படித்து முடித்தாலும், படித்து முடித்தவுடன் வேலை
வாய்ப்பில்லை அதுவும்; அனைவர்க்குமில்லை, கிடைத்தாலும்
எதிர்பார்த்த ஊதியம் இல்லை; எதிர்பார்த்த சம்பளம் கிடைத்தால்
உற்றார் உறவினரை உதறி தள்ளிவிட்டு ஊர்விட்டு ஊர்,
அல்லது நாடுவிட்டு நாடு செல்லும் பரிதாப நிலைதான்
இப்போது இந் நிலைமை என்றால் மாணவ மாணவியராக
இருப்போர் எதிர்காலத்தில் பெற்றோராகும் போது நமது
நிலை என்ன நிலையோ அச்சமாக இருக்கிறது, அல்லவா?
எதிர்காலம் எழுச்சியும், வளர்சியும், எதிர்பார்க்கும்
விதமாகவும் அமைய எண்ணினால் "அமைதி பூங்கா" அறக்கட்டளை
மாணவ, மாணவியர் அமைத்திட, ஏற்படுத்திட, உருவாக்கிட வேண்டியது
கட்டாயமாக இருக்கிறது.
இக்கட்டாயத்தில் நாம் ஒன்றை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்
1947 ஆகஸ்ட்டு 15ம் நாள்வரை அரபியரும் ஆங்கிலேயரும்,
அயல் நாட்டு அனைவரும் இந்தியாவிற்கு விஜயம் செய்து வியாபாரம் செய்து
பிழைத்தார்கள் என்பது வரலாறு
அதே நாள் சுதந்திரம் வாங்கியது முதல் இன்றுவரை
இந்தியர் பிழைப்புத்தேடி அயல் நாடு செல்ல வைத்தது நம் தகராறு; ஏன்?
என்னவளம் இல்லை இந்த திரு நாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்
உழைப்போம் உண்மையாய் உள் நாட்டில்
ஒரு நாள் உலகம் உற்று நோக்கும் தமிழ் நாட்டில்

எவர்களை வெளியேற்றி சுதந்திரம் அடைந்தோமோ
அவர்களிடமே கடன் வாங்கிய நாடாக இருக்கும் அவல நிலை
வெளி நாடு வந்தாலும் அவர்க்ளின் கீழ் பணிபுரியும்
"சணி" நிலை
வரும் 15-08-2011 அன்று சுதந்திரம்க் பெற்று 64 வருடம் நிறைவு
பெற்று 65-வது வருடம் ஆரம்பம்? ஏன் இந்த சுதந்திரம்
என்றாவது சிந்தித்ததுண்டா? இன்று முதல் சிந்தியுங்கள், சிந்தித்துக்கொண்டேயிருங்கள்
01-06-2011 வரை
அன்று எதிலும் "மனிதன் உரிமை" இல்லாதவன்
என்பதை படிப்போம்; பயணத்தை தொடர்வோம்
"அமைதி பூங்கா" அறக்கட்டளையை நோக்கி
புறப்படுங்கள் உடனே, மாணவ மாணவியரே!
நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்.

, , , 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தை பதிவு செய்ய