பிறப்பிலும், இறப்பிலும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்நாளிலும் தனக்கென்று எந்த உரிமையையும் பெற்றிராத இந்த மனித சமூகம் முழுவதும், நலமாய், நல்லவிதமாய், நாகரீகமாய் வாழத்தான் நினைக்கின்றது, முனைகிறது.
ஆனால்,அந்த ஆசை நிறைவேறுவதில்லை மகான்களாக இருந்தாலும் சரி, மாமேதைகளாக இருந்தாலும் சரிதான்.
அந்த காரணத்தைத்தான் 01.07.2011 இன்று நாம்
அமைதி பூங்காவில் ஏமாறலாமா? ஏமாற்றலாமா?
என்ற தலைப்பின் ஊடாகத் தெரிந்துக் கொள்ள போகிறோம் 100 % மக்களும் ஏதாவது ஒருவிதத்தில் ஏமாந்து விடுகிறார்கள் இதில் 10 % மக்கள் ஏமாற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இதற்கான, அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான் "நம்பிக்கை" ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கையில்தான் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இது பலவகைப்படும் : இறைநம்பிக்கை, தன்னம்பிக்கை, இப்படி அடுக்கலாம்.
ஏமாறுவதற்க்கும், ஏமாற்றுவதற்கும் முதலிடம் வகுப்பது "மூடநம்பிக்கை"யாகும்; எனவே மூடநம்பிக்கை என்றால் என்ன? என்பதை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதை நாம் 01.08.2011-ல் விளங்கப்படுத்துவதுடன் யார், யார் எப்படியெல்லாம் ஏமாறுவார்கள், அல்லது ஏமாற்றுவார்கள் என்பதை கீழ்காணும் தலைப்பில் விரிவாக விளங்க இருக்கிறோம்.
1.அரசாங்கம் எப்படி மக்களை ஏமாற்றுகிறது ; மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள்; மக்கள் எப்படி அரசாங்காத்தை ஏமாற்றுகிறார்கள்.
2.ஆன்மீகவாதிகள் பக்தர்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்; பக்தர்கள் எப்படி ஏமாறுகிறார்கள்; பக்தர்கள் எப்படி ஆன்மீகவாதிகளை ஏமாற்றுகிறார்கள்; ஆன்மீகவாதிகள் எப்படி ஏமாறுவார்கள்.
3.தொண்டு நிறுவனங்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள்; அதை நம்புபவர்கள் எப்படி ஏமாறுகிறார்கள்; மக்கள் தொண்டு நிறுவனத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள்.
4. கணவன் மனைவியை எப்படி ஏமாற்றுகிறான்; மனைவி எப்படி ஏமாறுகிறாள்; மனைவி எப்படி கணவனை ஏமாற்றுகிறாள்; கணவன் எப்படி ஏமாறுகிறான்;
5.மருத்துவர் எப்படி நோயாளிகளை ஏமாற்றுகிறார்; நோயாளி எப்படி ஏமாறுகிறார்;நோயாளி எப்படி மருத்துவரை ஏமாற்றுகிறார்; மருத்துவர் எப்படி ஏமாறுகிறார்
6.முதலாழி எப்படி தொழிலாளியை ஏமாற்றுகிறார்; தொழிலாளி எப்படி ஏமாறுகிறார்; தொழிலாளி எப்படி முதலாழியை ஏமாற்றுகிறார்; முதலாளி எப்படி ஏமாறுகிறார்.
7.மணமகன் அல்லது மணமகளை தேடும் போது மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரை எப்படி ஏமாற்றுகிறார்கள்; மணமகள் வீட்டார் எப்படி ஏமாறுகிறார்கள்; மணமகள் வீட்டார் எப்படி மணமகனை ஏமாற்றுகிறார்கள்; மணமகன் வீட்டார் எப்படி ஏமாறுகிறார்கள் .
8.ஒரு நாடு மற்றொரு நாட்டை எப்படி ஏமாற்றுகிறது;
இப்படியாக இன்னும் பலவகையில் ஏமாறுதலையும் , ஏமாற்றுதலையும் விளங்கிக்கொள்ளப் போகிறோம்.
1.ஒருவரால் மற்றொருவர் ஏமாறுவது
2.தன்னைத்தானே ஏமாறுவது என இருவகைப்படும்
இப்படி எல்லாம் எழுதுவதற்கு காரணம் என்ன?
மனிதனை, மனிதன் சாப்பிடுகிறான்.
இது மாறுவது எப்போது , தீருவது எப்போது என்பது தான் நமது கவலையாய் இருக்கிறது.
இதை மாறுவது, என்பது இனி உள்ளக் காலங்களில் ஆன்மீகவாதிகளாலோ,அரசியல்வாதிகளாலோ முடியாத காரியம் என்பது தெள்ள தெளிவாக தெரிந்து விட்டது.
எனவே , தான் மாணவ, மாணவியரைக் கொண்டு நமது தேவைகள் அனைத்தையும் சேவையாக மாற்றி செயல்ப்படுத்துவதற்கு "அமைதி பூங்கா" என்று முனைந்துள்ளோம்
எனவே, மாணவ மாணவியர்க்கு; அன்புடன்
* சமச்சீர்க் கல்விக்காக செய்தது தேவையற்ற கிளர்ச்சி
*ஆர்ப்பாட்டமும், போராட்டமும் என்றும் தராது மலர்ச்சி
*செய்ய வேண்டியது அரசே அரவணைக்கும் நிகழ்ச்சி
*"அமைதி பூங்கா" அடைய வேண்டும் அதற்கு வளர்ச்சி
*இதில்தான் நமக்கு இருக்கு நிச்சயம் எழுச்சி
*அதற்காக எடுக்க வேண்டும் உண்மையான முயற்ச்சி
*அதில் ஏற்படும் தடங்கல்களில் வரக்கூடாது மன தளர்ச்சி
*இதில் தான் மனித சமுதாயத்திற்கே கிடைக்கும் பெரும் உயர்ச்சி
*அதற்காக செய்வோம் "அஹிம்சையுடன்" அறிவு புரட்சி
*இதில் நமக்கு கிடைப்பது உறுதியான, உண்மையான மன மகிழ்ச்சி
*இதற்கு நம்மிடம் தேவை முழு ஒற்றுமை எனும் உணர்ச்சி
நாடென்ன செய்தது நமக்கு;
எனக் கேள்விகள் கேட்பது இழுக்கு
நாமென்ன செய்தோம் அதற்கு
என உணர்ந்தால் நன்மை நமக்கு
"அமைதி பூங்கா"வை படிப்பவர்கள் தவறாது இச்செய்திகளை தங்களுக்கு அறிந்த மாணவ , மாணவியர்களுக்கு அறிமுகம் செய்யவும்.
"நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்:நல்லதே நடக்கட்டும்."